Aug 24, 2016

தமிழனின் வீரம் பற்றி ஒரு பழைய கவிதை


கங்கை நதி தீரத்திலே போராடினான்
தமிழன் காவிரியின் ஓரத்திலே புகழ் பாடினான்
பொங்கு கடல் அனைத்தையும் கட்டி ஆண்டான்
தமிழன் பூதலத்தில் மேலவன் என்று உலகம் போற்ற

Source : Raja Rani (1956 Film)

Dec 21, 2014

தெரிந்து கொள்வோம் - நாட்களை பற்றி



1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண் டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் (1010 - இன்று வரை )





இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழமன்னனால் (கி.பி.985-1014) கட்டப்பட்டது.
கட்டி முடிக்கப்பட்டு 1000 வருடங்கள் ஆயினும் இன்னும் சிறிது கூட சேதம் அடையாமல் உள்ளது.

இதை போன்று ஒரு கோவிலை எவன் இன்று  கட்ட முடியும் . 

இதன் மேல் உள்ள கலசம் மட்டும் 80 ஆயிரம் கிலோ . எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியும் இல்லாத அந்த காலத்தில் எப்படி இந்த கல்லை தூக்கி வைத்து இருப்பார்கள் .

இப்படி ஒரு காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஸம் நம்மிடம் இருக்கும் போது 
Taj Mahal , Eiffel Tower ஐ பார்த்து வியந்து போகிறோம் .